போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் உதவிகமிஷனர் உட்பட 37 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்
2022-10-01@ 00:04:59

மதுரை: மதுரையில் கடந்த 2019ல் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றதாக கியூ பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாஸ்போர்ட் அலுவலக அலுவலர்கள், தபால்துறையினர், போலீசார் உள்ளிட்ட 40 பேருக்கு எதிராக பாஸ்போர்ட் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் துவக்க கட்ட குற்றப்பத்திரிகை மதுரை ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு பதியப்பட்டவர்களில் முகம்மது காசிம், கோமதி ஆகியோர் இறந்தனர்.இந்த வழக்கின் விசாரணை மாஜிஸ்திரேட் பாக்யராஜ் முன் நேற்று துவங்கியது. இதற்காக, அப்போதைய நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனர் சிவக்குமார், அவனியாபுரம் இன்ஸ்பெக்டராக இருந்த இளவரசன், ஏட்டு கந்தசாமி உள்ளிட்ட 37 பேர் ஆஜராகினர். அனைவரிடமும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டைப் பொறுத்து 700 பக்கம் முதல் ஆயிரம் பக்கம் வரையிலான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதை 37 பேரும் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை அக். 28க்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
Tags:
Fake document Assistant Commissioner of Passports 37 persons Charge sheet copy போலி ஆவணம் பாஸ்போர்ட் உதவிகமிஷனர் 37 பேரு குற்றப்பத்திரிகை நகல்மேலும் செய்திகள்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
மறைமலைநகர் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி மிரட்டிய வாலிபர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!