சீன செல்போன் கம்பெனி சொத்து முடக்கத்துக்கு ஓகே
2022-10-01@ 00:04:45

புதுடெல்லி: செல்போன் நிறுவனமான ஷாவ்மியின் ரூ.5,551 கோடி சொத்து முடக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சீன செல்போன் நிறுவனமான ஷாவ்மி, கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள உற்பத்தியாளர்களிடம் இருந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கி விற்பனை செய்கிறது. ஷாவ்மி நிறுவனம் வருடத்திற்கு ரூ.34,000 கோடி வருமானம் ஈட்டி வருகிறது. இதன் பெரும் பகுதியை சீனாவில் உள்ள தனது குழும நிறுவனங்களுக்கு போலி நிறுவனங்களும் மூலம் அனுப்பி வந்தது தெரிய வந்தது. ஷாவ்மியின் சீன தலைமை குழுமம் அறிவுறுத்தலின்படி இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.
ஒப்பந்த உற்பத்தியாளர்களுக்கு ஷாவ்மி இந்தியா நிறுவனம் தொழில்நுட்ப உள்ளீடு மற்றும் மென்பொருள் தொடர்பான எந்த உதவியையும் வழங்கவில்லை. ஆனால், எந்த வகையான சேவையையும் வழங்காத மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணத்தை கைமாற்றியுள்ளது. விசாரணைக்கு பிறகு கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஷாவ்மியின் ரூ.5,551 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதற்கு ஒப்புதல் கோரி அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட அமைப்புக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. அதன்படி, ஷாவ்மியின் சொத்து முடக்கத்துக்கு அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் செய்திகள்
பெங்களுருவில் இந்திய எரிசக்தி வாரத்தை பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: கடைசி போட்டியை நேரில் காண இருக்கும் பிரதமர் மோடி..?
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும்: டெல்லியில் சி.வி.சண்முகம் பேட்டி
சுப்ரீம் கோர்ட் அமர்வில் சிங்கப்பூர் தலைமை நீதிபதி
பிபிசி ஆவணப்படம் விவகாரம் ஒன்றிய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ஒபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம்: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!