தமிழக மீனவர்கள் வழக்கு ஒன்றிய அரசுக்கு 14 நாட்கள் கெடு
2022-10-01@ 00:04:36

புதுடெல்லி: ‘தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் அக்டோபர் 14க்குள் பதிலளிக்க வேண்டும்,’ என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஒன்றிய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என கோரியுள்ளார். இதை கடந்த மாதம் 2ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. இந்நிலையில், நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், ‘இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் வேண்டும்,’ என்றார். அதை ஏற்ற நீதிபதிகள், அக்டோபர் 14ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கையும் ஒத்திவைத்தனர்.
Tags:
Tamilnadu fishermen case united government 14 days தமிழக மீனவர்கள் வழக்கு ஒன்றிய அரசு 14 நாட்கள் கெடுமேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!