புகழ்பெற்ற தாஜ்மஹாலை விட வெளிநாட்டினரின் முதல் சாய்ஸ் மாமல்லபுரம்
2022-10-01@ 00:04:30

சென்னை: 2021-22ம் ஆண்டில் புகழ்பெற்ற தாஜ்மஹாலை விட மாமல்லபுரம் அதிக வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. கொரோனா காலத்துக்கு பிறகு சுற்றுலாத்துறை மீண்டும் இயங்க தொடங்கியது. அதில் தாஜ்மஹாலை விட மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் வெளிநாட்டு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2021-22ம் ஆண்டிற்கான நினைவுச் சின்னங்களை பார்வையிடும் பார்வையாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி சுமார் 1,44,984 வெளிநாட்டினர் மாமல்லபுரத்தின் நினைவுச் சின்னங்களை பார்வையிட்டுள்ளனர். 38,922 வெளிநாட்டினர் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர். மாமல்லபுரம் 45.5% பார்வையாளர்கள் பெற்றுள்ளது. தாஜ்மஹால் 12.21% பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.
இந்நிலையில் டெல்லி அருகே ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை விட சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் வெளிநாட்டு பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் ஐந்து நினைவுச் சின்னங்களான மாமல்லபுரம், சலுவன்குப்பத்தில் உள்ள புலிகுகை பாறை கோயில், செஞ்சி கோட்டை, திருமயத்தில் உள்ள கோட்டை அருங்காட்சியகம், சித்தன்னவாசலில் உள்ள பாறையில் வெட்டப்பட்ட ஜெயின் கோயில் ஆகியவை நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்த முதல் 10 நினைவுச் சின்னங்கள் ஆகும். தமிழ்நாடு தற்போது இந்தியாவின் பாரம்பரிய தலைநகரமாக மாறியுள்ளது. வெளிநாட்டினர் அதிகம் பார்வையிடும் முக்கிய இடமாக மாமல்லபுரம் உள்ளது. மாமல்லபுரத்தை உலகத் தரத்திற்கு இணையாக மாற்றும் வகையில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags:
The famous Taj Mahal the first choice of foreigners Mamallapuram புகழ்பெற்ற தாஜ்மஹாலை வெளிநாட்டினரின் முதல் சாய்ஸ் மாமல்லபுரம்மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!