சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைந்து காணப்படுகிறது
2022-09-30@ 18:08:34

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைக்கும் வரத்து அதிகரித்தாகரணத்தால் தொடர்ந்து விலையேற்றமாக இருந்த கேரட் மற்றும் பீன்ஸ் விலை ரூ 40 குறைந்து விற்பனை ஆகிறது. கோயம்பேடு மொத விற்பனை அங்காடிக்கு காய்கறிகள் வரத்து குறைந்து இருப்பதால் கடந்த 10 நாட்களாக காய்கறி விலை உயர்ந்து கேரட் 120 ரூபாய் வரை, பீன்ஸ் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தென்மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்த காரணத்தால் தற்பொழுது விலை சற்று குறைந்துள்ளது. குறிப்பாக கேரட் மற்றும் பீன்ஸ் விலை கணிசமாக குறைந்துள்ளது.
100 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட கேரட் விலை குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 80 ரூபாய் விற்கப்பட்ட பீன்ஸ் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்த காரணத்தால் காய்கறி விலை குறைந்த விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளார்.
இன்றைய நிலவரப்படி தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய் இருந்து 32 வரை, உருளைக்கிழங்கு 25 ரூபாய் முதல் 34 ரூபாய் வரை, சின்ன வெங்காயம் 40 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதே நிலையில் காய்கறி விலை தொடர்ந்தால் மேலும் சில நாட்களுக்கு காய்கறி விலையில் மற்றம் இருக்காது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
‘சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது: காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்
சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!