திருவில்லிபுத்தூரில் திருப்பதி பிரமோற்சவ விழாவில் சீனிவாசப் பெருமாள் அணிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதி சென்றது
2022-09-30@ 15:24:19

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை, திருப்பதி செல்லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதி கோயிலில், ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா விமரிசையாக நடக்கும். இதன் 5ம் நாள் திருவிழாவில், ஆண்டாள் சூடிய மாலையை திருப்பதி சீனிவாசப் பெருமாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்தாண்டு திருப்பதியில் பிரமோற்சவத்தின் 5ம் நாள் திருவிழா நாளை (அக். 1) நடைபெறுகிறது. இதையொட்டி, விருதுநகர் மாவட்டம்,
திருவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலையை திருப்பதிக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி, ஆண்டாள் கோயிலில் நேற்று நடைபெற்றது. இதற்காக கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் காட்சியளித்தார். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாலை ஆண்டாளுக்கு யஅணிவிக்கப்பட்டு, தீபாரதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து, ஒரு கூடையில் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் ஆண்டாள் கிளி ஆகியவை வைக்கப்பட்டு, நகரின் முன் மாடவீதிகளில் மேளதாளம் முழங்க, ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், திருவில்லிபுத்தூர் மட்டுமல்லாமல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!