டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முப்படை தளபதி அனில் சவுகான்...
2022-09-30@ 10:23:40

புதுடெல்லி: ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அனில் சவுகானுக்கு முப்படைகளின் தலைமை தளபதி பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் இதற்கு முன்பு பிபின் ராவத் பணியமர்த்தப்பட்டார். அவருக்கு அடுத்தாக, ராணுவ தளபதியாக இருந்த எம்.எம். நரவனே புதிய தலைமை தளபதி ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் 62 வயதை பூர்த்தி அடையாதவராக இருந்தால் லெப்டினெட் ஜெனரல் அல்லது ஜெனரல் பணி நிலையில் ஓய்வு பெற்றிருந்தால் அவரை முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கலாம் என கடந்த ஜுன் மாதம் விதியில் திருத்தம் செய்யப்பட்டது.
முப்படைகளின் அடுத்த தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் அவரது தந்தை சுரேந்திர சிங் சவுகானுடன் டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, விமானப்படை தலைமை ஏர் சீப் மார்ஷல் விஆர் சவுதாரி, ஏர் மார்ஷல் பிஆர் கிருஷ்ணா மற்றும் கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் எஸ்என் கோர்மேட் ஆகியோருடன் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் பேசினார்.
இவர் முப்படைகளின் தலைமை தளபதியாக மட்டுமின்றி பாதுகாப்பு மந்திரியின் ராணுவ ஆலோசகர், அணு ஆயுதக்கட்டளை ஆணையத்தின் ஆலோசகர் போன்ற பொறுப்புகளையும் வகிப்பார். அடுத்த மாதம் குஜராத்தில் நடைபெற உள்ள பாதுகாப்பு கண்காட்சியில் முப்படை தலைமை தளபதியின் தேவை அவசியம் என கருதி இந்த நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்