SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

2022-09-30@ 00:47:00

மும்பை: முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக இந்திய உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், தற்போது இவருக்கு பாதுகாப்பு இசட் பிளஸ் வழங்கப்பட்டுள்ளது. இசட் பிளஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் அவருக்கு 58 கமண்டோ படையினர் பாதுகாப்பு வழங்குவார்கள். பாதுகாப்புக்காக செலவினங்களை முகேஷ் அம்பானி ஏற்பார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டருகே 20 ஜெலட்டின் குச்சிகளுடன் கார் நிறுத்தப் பட்டிருந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் சச்சின் வாஷே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்