தீவிரவாதத்துக்கு எதிரான போர் முன்னணி நாடாக இந்தியா விளங்குகிறது: ஜனாதிபதி முர்மு பேச்சு
2022-09-30@ 00:46:12

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் முன்னணி நாடாக இந்தியா விளங்குகிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு (ஐஎப்எஸ்) பயிற்சி அதிகாரிகள் சிலர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் நேற்று சந்தித்தனர். அப்போது, அவர்கள் மத்தியில் திரவுபதி முர்மு பேசுகையில், ‘பொருளாதார வளர்ச்சி மற்றும் பல அம்சங்களின் அடிப்படையில் உலக அரங்கில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல முன்னேறிய நாடுகள் கூட அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் எழவில்லை. ஆனால், இந்தியா அதில் இருந்து மீண்டு எழுந்து உள்ளது.
நமது நாடு உலகின் முன்னணி பொருளாதார நாடாக உயர்ந்து உள்ளது. உலக நாடுகளும் இந்தியாவை மிகுந்த மரியாதையுடன் பார்க்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் இரு தரப்பு மற்றும் பல தரப்பு உறவுகளில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அமைப்புகளில் இந்தியா சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏராளமான துறைகளில் இந்தியாவின் தலைமைக்கு யாரும் சவால் விட முடியாத அளவில் நாடு உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முன்னணி நாடாக பங்கு வகித்து வருகிறது’ என்று கூறினார்.
மேலும் செய்திகள்
தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு லட்டு கிடைக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி தகவல்
சேலையால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு
அடிதடி வழக்கில் இருந்து மகனை விடுவிப்பதாக கூறி தாய்க்கு செக்ஸ் டார்ச்சர்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
அழகு சாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு: மும்பையில் சோகம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!