அதிகாரிகள் மிகுந்த அலட்சியத்துடன் நடக்கின்றனர்; மனித கழிவை மனிதனே அகற்றினால் கலெக்டர், ஆணையர்கள் சஸ்பெண்ட்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் எச்சரிக்கை
2022-09-30@ 00:42:04

மதுரை: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது, இந்நிலை தொடர்ந்தால் கலெக்டர், மாநகராட்சி ஆணையர்களை சஸ்பெண்ட் செய்யுமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட நேரிடும் என்று ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மனிதக் கழிவுகளை அகற்றுவது, பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்வது, கழிவுநீரை அகற்றுதல், குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை தூய்மைப் பணியாளர்கள் கைகளால் மேற்கொள்ளும் நிலை உள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியின் போது, பணியாளர்கள் பலர் உயிரிழந்ததால் இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஐகோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனாலும், பல மாவட்டங்களில் இந்த நிலை தொடர்கிறது. இதனால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றனர். எனவே, மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோக்கள் மற்றும் இயந்திரங்களை மட்டும் ஈடுபடுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதுதொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இயந்திரங்கள் மூலமே கழிவுகள் அகற்றப்படுகிறது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘மனுதாரர் தரப்பில் பல்வேறு புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. ஆனாலும் மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளில் அதிகாரிகள் மிகுந்த அலட்சியத்துடன் நடந்து கொள்கிறார்கள். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர். நீதிமன்றங்களின் உத்தரவையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்யுமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட நேரிடும்.
மேலும் நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றனர். பின்னர், ‘‘மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்கள் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரங்களை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் குறிப்பிடும் சம்பவம் உண்மையென தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கலெக்டர் உள்ளிட்டோர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரம் தவறாக இருந்தால் மனுதாரருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.
மேலும் செய்திகள்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
மறைமலைநகர் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி மிரட்டிய வாலிபர் கைது
காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு தினம் திமுகவினர் அமைதி பேரணி அனைத்துகட்சியினர் மரியாதை
டெல்டாவில் நள்ளிரவு வரை மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 70,000 ஏக்கர் சம்பா மூழ்கியது: 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!