மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு; பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்
2022-09-30@ 00:39:54

விழுப்புரம்: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், நிபந்தனை ஜமீனில் வெளியே வந்த பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அவர்களிடம் போலீசார் 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அதன்படி, 5 பேரும் நேற்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி கோமதி முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணைகள் மேற்கொண்டனர். அண்மையில் வெளியான சிசிடிவி காட்சிகள் தொடர்பாகவும் அவர்களிடம் விசாரித்ததாக தெரிகிறது. அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் 5 பைகளில் ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் வழங்கியுள்ளனர்.
மேலும் செய்திகள்
குளித்தலை கடம்பன் துறையில் தைப்பூச திருவிழா: பட்டு போன மரத்தை அகற்றி சாலை சீரமைப்பு
மாயனூர் காவிரி கதவணை ரூ.185 கோடியில் புனரமைக்கும் பணி மீண்டும் துவங்கியது: குடிநீருக்காக 20 மதகுகளில் தண்ணீர் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்: அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
அருப்புக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்கள்: மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகர் நகராட்சி பகுதியில் மூடிக் கிடக்கும் சமுதாயக் கூடங்களை திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
சிவகாசியில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் மூலம் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: பயணிகள் கோரிக்கை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!