அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி அளித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்: தமிழக அரசு ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்: இன்று விசாரணை
2022-09-30@ 00:30:36

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை திரும்ப பெறக்கோரி தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. இது, இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து கடந்த 22ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறி ஆர்.எஸ்.எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி இளந்திரையன் முன் ஆஜரான ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், கடந்த 22ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும். மற்ற கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும் நிலையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரினர்.
இதைக்கேட்ட நீதிபதி இளந்திரையன், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு பதிலாக தமிழக அரசு அனுமதி அளிக்க மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று அறிவுறுத்தினார்.இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டம் -ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. சட்டம் -ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
மேலும் செய்திகள்
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!