கைதியிடம் செல்போன் பறிமுதல்
2022-09-30@ 00:03:23

புழல்: புழல் விசாரணை சிறையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை சிறை காவலர்கள் உள்ளே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு கைதி கழிவறையில் இருந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தனர். இதையடுத்து, அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தாம்பரம் பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரவணன் (27) என்பதும், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது. இதுகுறித்து, சிறைத்துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
உதவி செய்ய சென்ற காவலருக்கு கத்திக்குத்து
ரூ.5 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் சிக்கினார்; இருவர் தலைமறைவு
ரூ.4 ஆயிரம் லஞ்சம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் கைது
தொழிலாளி மகள் அபகரிப்பு அதிமுக நிர்வாகி கைது
குடிநீர் தொட்டியில் நாய் சடலம் வீசிய மனநிலை பாதித்த வாலிபர் கைது
பாலியல் தொந்தரவு மாணவி தற்கொலை மாணவர்கள் கைது
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!