உர கிடங்கை செயல்படுத்த கோரிக்கை
2022-09-29@ 18:46:29

சின்னாளபட்டி: பாளையன்கோட்டை ஊராட்சியில் முடங்கி உர கிடங்கு செயல்படாததால், அப்பகுதி முழுவதும் குப்பைக் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது பாளையன்கோட்டை ஊராட்சி. இந்த ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முடங்கி வருகிறது. குறிப்பாக பாளையன்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, குப்பைகளை தரம்பிரிக்கும் உரக்கிடங்கு முறையாக செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகளின் இருபுறமும் குப்பைக்கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.
இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்துவதுடன், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் உரக்கிடங்கை செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்ட இயக்குநர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின்கட்டண முறை விரைவில் நடைமுறைக்கு வரும்: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா 8 ஊர் சாமிகள் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!