மருவாய் ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பு தொட்டி உடைப்பு: காவல்நிலையத்தில் புகார்
2022-09-29@ 18:27:08

வடலூர்: குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட மருவாய் ஊராட்சியில் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை நீர் சேகரிக்கும் தொட்டி மருவாய் ஊராட்சிக்கு மூன்று தொட்டிகள் வழங்கப்பட்டு உள்ளது. மூன்று தொட்டிகளில் ஒரு தொட்டி வேலை முடிவற்ற நிலையில் மீதமுள்ள இரண்டு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. காலையில் வழக்கம்போல் உள் மருவாயில் தொட்டி அமைக்கும் பணியை செய்வதற்கு ஊராட்சி பணியாளர்கள் சென்று பார்க்கும் பொழுது தொட்டியை சமூகவிரோதிகள் உடைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் நேரில் பார்வையிட்டார். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் வடலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மழைநீர் சேகரிப்புத் தொட்டியை உடைத்த சமூக விரோதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!