ரூ.437 கோடியில் மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு: பணிகள் விரைவில் துவக்கம்
2022-09-29@ 14:57:02

மதுரை: ரூ.437 கோடியில் மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது. இந்தியாவில் பல்வேறு ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய 5 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட இருக்கின்றன. இந்த ரயில் நிலையங்களில், புதிய ரயில் நிலைய கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது.
இதற்கு ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். மதுரை ரயில் நிலையம் ரூ.347 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட இருக்கிறது. மதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பகுதிக்கு மேல் பயணிகள் காத்திருக்கும் அறை அமைய இருக்கிறது. அங்கிருந்து நேரடியாக அனைத்து நடைமேடைகளுக்கும் சென்று கொள்ளலாம். மதுரை ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்காக ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது வேலை ஆரம்பித்த நாளிலிருந்து 36 மாதங்களில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ரயில் நிலையம் ரூ.90 கோடி செலவில் மறு சீரமைக்கப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்ததாரரும் தேர்வு செய்யப்பட்டு, வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் துவங்கப்பட உள்ளது. பணிகள் துவங்கிய நாளிலிருந்து 18 மாதங்களில் புதிய ரயில் நிலைய கட்டிடம் தயாராகிவிடும். மேலும் திருநெல்வேலி மற்றும் கும்பகோணம் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான திட்ட மதிப்பீடு, திட்ட சாத்திய அறிக்கை ஆகியவற்றை தெற்கு ரயில்வே நிர்வாகம் தயாரித்து வருகிறது.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!