பேண்டேஜ் உற்பத்தி கழிவுநீர் கலப்பதால் கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்: ரூ.25 லட்சம் நஷ்டம் என குத்தகைதாரர் வேதனை
2022-09-29@ 12:46:01

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கண்மாயில் பேண்டேஜ் உற்பத்தி கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் விஷமாக மாறி ரூ.25 லட்சம் மதிப்புள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. ராஜபாளையம் சத்திரப்பட்டி வாகைகுளத்தில் கண்மாய் உள்ளது. இந்த தண்ணீரை நம்பி சுமார் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த கண்மாயை ராஜபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் முருகேசன் என்பவர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு குத்தகை எடுத்து, மீன் குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளார்.
தற்போது மீன் குஞ்சுகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விற்பனைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில், சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் துணி உற்பத்திக்காக பயன்படுத்தக்கூடிய சைஸிங் கழிவு நீர் கண்மாயில் கலப்பதால் தண்ணீர் விஷமாக மாறி மாசடைந்துள்ளது. இதனால் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குத்தகைதாரர் வேதனை தெரிவிக்கிறார்.
விவசாயிகள் கூறுகையில், இந்த பகுதியில் பேண்டேஜ் உற்பத்திக்காக பயன்படுத்திய கழிவுநீர் கொடிய விஷமாக மாறி கண்மாயில் கலப்பதால் பயிர்கள் அனைத்தும் கருகி விடுகின்றன. இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தோம். அதிகாரிகள் அலட்சியப் போக்கில் இருப்பதால் விவசாயமும் பாதிப்படைந்துள்ளது. அதேபோல் தற்போது மீன் ஏலம் எடுத்தவரும் நஷ்டம் அடைந்துள்ளார் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
சிறுசேரி சிப்காட் மென்பொருள் பூங்காவில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை
கல்குவாரி லாரிகளால் புழுதிக்காடாக மாறிய ஓணம்பாக்கம்-ஜமீன் எண்டத்தூர் சாலை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோத்தகிரியில் உலா வரும் ஒற்றை கரடி: மக்கள் அச்சம்
பாலக்காடு அருகே வளர்ப்பு யானை திடீரென சாலையில் ஓட்டம்: போக்குவரத்து பாதிப்பு
கடவூர், தோகைமலை பகுதியில் நனைந்த வைக்கோல் வெயிலில் உலர்த்தும் பணி தீவிரம்-சாரல் மழையால் சம்பா அறுவடையும் பாதிப்பு
வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் குவிந்த கால்நடைகள்-₹50 லட்சம் தாண்டிய வர்த்தகம்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!