ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்த ராணுவ அதிகாரி தூக்கிட்டு தற்கொலை
2022-09-29@ 00:24:14

பாணாவரம்: ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பாணாவரத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி, தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார்(44). இவர், ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் அருகில் உள்ள கோபால்பூரில், இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வந்தார். அவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அவர்கள் பாணாவரம் திடீர் நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் ராணுவ அதிகாரி சசிகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நண்பர்கள் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சசிகுமாரின் சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் சிலர் கோபால்பூர் விரைந்தனர்.
Tags:
A serving army officer committed suicide in Odisha ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்த ராணுவ அதிகாரி தற்கொலைமேலும் செய்திகள்
அப்போ 109.5, இப்போ 70.69 டாலர் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்காதது ஏன்?: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு மீண்டும் அமல்
ஜாமீனுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் டெல்லி சிறை கைதிகளுக்கு ரூ. 5.11 கோடி வழங்க தயார்: மோசடி மன்னன் சுகேஷ் கடிதம்
பாகிஸ்தான், ஆப்கானில் பூகம்பத்தால் 12 பேர் பலி: 160 பேர் காயம்
6ஜி ஆராய்ச்சி, மேம்பாடு சோதனை மையம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பதற்றத்தை உருவாக்குவதோடு போலி செய்திகளால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!