கே.சி.பழனிசாமி நீக்கப்பட்ட பின்னரும் ஆன்லைனில் போலி உறுப்பினர் சேர்க்கை மூலம் பணம் பறிக்கிறார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
2022-09-29@ 00:23:07

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஆன்லைனில் போலியாக உறுப்பினர் சேர்க்கை செய்து பண மோசடி செய்து வரும் முன்னாள் எம்.பி.கே., சி.பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுகவிற்கு சம்பந்தமில்லாமல் அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு,கட்சியில் இருந்து நிக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, அதிமுக பெயரை பயன்படுத்துவதும், அதன் வண்ணத்தை பயன்படுத்துவது, இணையதளத்தில் பொதுமக்கள், மற்றவர்களிடத்தில் உறுப்பினர் சேர்க்கை என்ற அடிப்படையில் போலியான அட்டைகள் வழங்குவது, பணத்தை வசூல் செய்வது போன்ற மோசடியான, ஏமாற்று வேலையை கே.சி.பழனிசாமி செய்து வருகிறார். இதுதொடர்பாக கே.சி.பழனிச்சாமி மீது கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதும், போலியாக அதிமுகவில் உறுப்பினரை சேர்த்து வசூல் செய்வது, அதிமுகவின் கொடியை வண்ணங்களை உபயோகித்ததும், இந்த செயலை முற்றிலுமாக கண்டிக்கத்தக்கது. எனவே கே.சி.பழனிசாமி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
KC Palaniswami online fake membership former minister Jayakumar Commissioner's office complaint கே.சி.பழனிசாமி ஆன்லைனில் போலி உறுப்பினர் சேர்க்கை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கமிஷனர் அலுவலக புகார்மேலும் செய்திகள்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு
அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!