அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு
2022-09-29@ 00:22:57

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனை கடந்த 16ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டுக்கே சென்று திடீரென சந்தித்தார். இதையடுத்து, கடந்த 17ம் தேதி பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னை, ஜெமினி பாலம் அருகே உள்ள பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில், தற்போது அதிமுகவில் அமைப்பு செயலாளராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அரசியல் ஆலோசகர் பதவி வழங்கி ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் காலை திடீரென அறிவித்தார்.
ஓபிஎஸ் அறிவித்த சில மணி நேரத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் இருந்தே நீக்குவதாகஎடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை அசோக்நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்கு நேற்று காலை 10.30 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சென்றார். அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் வைத்திலிங்கம் எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்களும் உடன் சென்றனர். பின்னர் அனைவரும் சிறிது நேரம் அவரது வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கவே ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டுக்கு சென்றதாக ஆதரவாளர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு
அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!