முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் நியமனம்
2022-09-29@ 00:22:20

புதுடெல்லி: நாட்டின் முப்படை புதிய தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவம், விமானம் மற்றும் கடற்படைக்கு தனித் தனியாக தளபதிகள் உள்ள நிலையில், முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டது. இதன்படி, நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றார். இவர் கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அதன் பிறகு, கடந்த 9 மாதங்களாக இப்பதவி காலியாக உள்ள நிலையில், முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் செயல்படுவார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனில் சவுகான் ராணுவத் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவமிக்கவர்.
மேலும் செய்திகள்
தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு லட்டு கிடைக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி தகவல்
சேலையால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு
அடிதடி வழக்கில் இருந்து மகனை விடுவிப்பதாக கூறி தாய்க்கு செக்ஸ் டார்ச்சர்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
அழகு சாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு: மும்பையில் சோகம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!