பாக். நிதியமைச்சராக இஷாக் தர் பதவியேற்பு
2022-09-29@ 00:09:31

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் நிதியமைச்சர் இஷாக் தர், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். இதனிடையே, ஐநா பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு நாடு திரும்பிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் லண்டனில் தனது அண்ணன் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார். அப்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இஷாக்கை மீண்டும் நிதியமைச்சராக்கும்படி ஷெபாசுக்கு நசாஸ் அறிவுரை கூறினார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் லண்டனில் இருந்து பிரதமர் ஷெபாசுடன் நாடு திரும்பிய இஷாக் நேற்று நாட்டின் நிதியமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார். அவருக்கு அதிபர் ஆல்வி ஆரிப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் ஷெபாஸ் கலந்துகொண்டார். பதவியேற்கும் முன், இஷாக் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து மேலவை எம்பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவு
சிலி நாட்டில் வெப்பக்காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழப்பு.! மேலும் பலர் காயம் என தகவல்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரிப்பு.! 67.69 லட்சம் பேர் உயிரிழப்பு
கடும் நெருக்கடிகளை தருகிறது ஐஎம்எப் மீது பாக். பிரதமர் குற்றச்சாட்டு
எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு
கடனை திருப்பி செலுத்துவதில் இலங்கைக்கு 2 வருட விலக்கு: சீனா உறுதி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!