தண்ணீர் தொட்டி இடிந்து மூதாட்டி பரிதாப சாவு: ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்
2022-09-28@ 17:52:50

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே தனிநபர் கட்டிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்ததால் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பெரிய கிணறு அருகே பஞ்சாயத்துக்கு உட்பட்ட புறம்போக்கு இடத்தில், அப்பகுதி அதிமுக வார்டு கவுன்சிலர் கணவர் முருகன் என்பவர் துணிகள் துவைக்க, தண்ணீர் தொட்டி கட்டி இருந்தார். தண்ணீர் தொட்டி கட்டி 10 நாட்களே ஆன நிலையில் இடிந்து விழுந்ததில், அதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி (58) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் ரங்கசாமி, ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சம்பவம் குறித்து ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கலையரசு, நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி செயலாளர் கருணாகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
மேலும் அப்பகுதியில் இடிந்து விழுந்த தண்ணீர் தொட்டியை பார்வையிட்டு, ஊராட்சி செயலாளர் கருணாகரனை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்தார். இதன்படி பிடிஓ சரவணன், கருணாகரனை சஸ்பெண்ட் செய்தார். இதனை கண்டித்து நாமகிரிப்பேட்டை வட்டார ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகள்
கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை!.. விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க மும்முரம்
தமிழ்நாடு வார்த்தையை பயன்படுத்தி முதல்வரின் உருவம் வரைந்த அரசு கல்லூரி மாணவி: பாராட்டுகள் குவிகிறது
நெல்லை, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: பணியில் ஈடுபட்டுள்ள 200-க்கு மேற்பட்டுள்ள தன்னார்வலர்கள்
பள்ளி பேருந்து ஏரியில் கவிழ்ந்து 22 மாணவர்கள் படுகாயம்
சத்தியமங்கலம் அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்து நாயை துரத்திய சிறுத்தை: மயிரிழையில் உயிர் தப்பிய நாய்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!