கேரளாவில் 18வது நாளாக ராகுல் காந்தி நடைபயணம்: நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு.. உற்சாகத்தில் ஆனந்த கண்ணீர் சிந்திய சிறுமி..!!
2022-09-28@ 15:33:15

திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது 18வது நாள் நடைப்பயணத்தை தனது சொந்த தொகுதியான வயநாட்டில் மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் 3,500 கி.மீ. ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தொடங்கினார். கடந்த 10ம் தேதி கேரளாவுக்கு சென்ற அவர், தொடர்ந்து அம்மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கேரளாவில் 18வது நாளாக ராகுல் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று நடந்து வருகின்றனர். அப்போது ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் பங்கேற்ற சிறுமி ஒருவர், உற்சாக மிகுதியால் ஆனந்த கண்ணீர் வடித்தபோது ராகுல் அவரை தேற்றினார்.
இதையடுத்து கேரள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளையும் ராகுல் சந்தித்து பேசினார். கேரளாவின் வந்தூரில் உள்ள நடுவத்து என்ற இடத்தின் வழியாக சென்று இன்று மலப்புரம் மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ள இருக்கும் ராகுல், நிலம்பூர் பேருந்து நிலையம் அருகே 20வது நாள் பயணத்தை நிறைவு செய்யவுள்ளார். கேரளாவில் 7 மாவட்டங்களில் 450 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ராகுல்காந்தி, அக்டோபர் 1ம் தேதி முதல் கர்நாடகாவில் தனது ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கவிருக்கிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, காஷ்மீரில் பயணத்தை நிறைவுசெய்யவுள்ளார்.
மேலும் செய்திகள்
2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை
வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
பாஜ, காங்கிரஸ் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
புதிதாக 1249 பேருக்கு கொரோனா
ஒன்றிய அரசுக்கு எதிரான 14 எதிர்க்கட்சிகள் மனு ஏப்.5ல் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
அதானி விவகாரத்தில் விசாரணை கேட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி 40 எம்பிக்கள் அதிரடி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி