சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் எவ்வளவு?: 19வது நாளாக அதிகாரிகள் நகை சரிபார்ப்பு பணி..!!
2022-09-28@ 14:24:55

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 19வது நாளாக நகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நகை சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் குழு ஆய்வு செய்து வருகிறது. சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சில நேரங்களில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நகைகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகள் முதன் முதலாக கடந்த 1955ம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பல்வேறு கால கட்டங்களில் கோவிலில் நகைகள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. தற்போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் உள்ளன. சிதம்பரம் கோயிலில் உள்ள நகைகள் அனைத்தும் 2005ம் ஆண்டுக்கு முன்னர் கடைசியாக ஆய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு கோயிலுக்கு வந்த புதிய நகைகள் எதுவும் ஆய்வு செய்யப்படவில்லை. 2005 முதல் 2022 ஜனவரி வரை கோயிலுக்கு கிடைத்த நகைகள் 19வது நாளாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நகைகளை சரிபார்க்கும் பணி சில நாட்களில் நிறைவு பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!