வியாசர்பாடியில் தொடர்ந்து குட்கா பொருள் விற்ற கடைக்கு அதிரடி சீல்
2022-09-28@ 02:05:49

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் தொடர்ந்து குட்கா பொருட்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னையில் குட்கா பொருட்களின் நடமாடத்தை தடுக்கவும், அதனை ஒழிக்கவும் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வியாசர்பாடி எம்கேபி நகர் 8வது மெயின் ரோடு பகுதியில் பாண்டியன் (54) என்பவருக்கு சொந்தமான அம்பாள் கூல் பார் என்ற கடையில் குட்கா விற்கப்படுவதாக எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதன்படி எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடையிலிருந்து குட்கா பொருட்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து அந்த கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதால் அந்த கடை மீது நடவடிக்கை எடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். இதையேற்று, நேற்று கொடுங்கையூர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயகோபால் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் எம்கேபி நகர் போலீசார் குறிப்பிட்ட அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். ஏற்கனவே குறிப்பிட்ட அந்த கடைக்கு இரண்டு முறை எச்சரிக்கை விடுத்த நிலையில், தொடர்ந்து குட்கா பொருட்களை விற்பனை செய்ததால் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!