தாவுத் இப்ராகிமின் கூட்டாளி கைது
2022-09-28@ 00:02:56

மும்பை: மும்பையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிமின் கூட்டாளி கைது செய்யப்பட்டார். நிழல் உலக தாதாவான தாவூத் இம்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ரியாஷ் பதி. இவரை, மும்பை காவல்துறையின் மிரட்டி பணம் பறித்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அந்தேரியில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பதி மற்றும் தாவுத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளரான சோட்டா சகிலின் கூட்டாளி சலீம் புரூட் (எ) முகமது சலீம் இக்பால் குரோஷி ஆகியோர் வெர்சோவா வர்த்தகரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். அந்த வர்த்தகரிடம் இருந்து பதியும், சலிம் புரூட்டும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.7.5 லட்சம் பணம் ஆகியவற்றை மிரட்டி பறித்துள்ளனர். இந்த வழக்கில் பதி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். சலீம் புரூட்டும் ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
மேலும் செய்திகள்
கட்சி தலைமையிடம் அதிருப்தி ஏற்படுத்த சோனியாவுக்கு போலி கடிதம் எழுதுவது யார்? போலீசில் புகாரளிக்க உள்ளதாக மாஜி முதல்வர் ஆவேசம்
‘பாதயாத்திரைக்கு வாங்க சார்...’தெலங்கானா முதல்வருக்கு ஷூவை பரிசு அனுப்பிய ஷர்மிளா
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லி ஆசாமியை தேடும் உ.பி போலீஸ்
அன்னைத் தமிழ் நிலத்திற்குப் பெயரை மீட்டளித்தவரின் நினைவாக என்றும் மிளிர்கிறது நம் தமிழ்நாடு: அண்ணா நினைவு நாளையொட்டி கனிமொழி எம்பி ட்வீட்
17ம் தேதி திறக்கப்பட இருந்த நிலையில் புதிய தலைமைச்செயலகத்தில் தீ விபத்து: தெலங்கானாவில் அதிகாலை பரபரப்பு
கேரள பட்ஜெட் இன்று தாக்கல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!