காவல்துறையை மிரட்டும் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி
2022-09-28@ 00:02:32

கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: கோவையில் பாஜ நடத்திய ஆர்ப்பாட்டம் மூலம் கோவை அமைதியாக இருப்பதை ஆர்எஸ்எஸ், பாஜ விரும்பவில்லை என தெரிகிறது. கோவை கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக பாஜ தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும். மாநில முதல்வரை மிரட்டும் விதமாக அண்ணாமலை பேசுகின்றார். தமிழக காவல் துறையை மிரட்டுகிறார். அரசியல் கட்சி தலைவர் என்ற அடிப்படை நாகரிகம் இல்லாத வகையில் பேசுகிறார். இத்தகைய பேச்சை அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு இது போல பேசுபவர்களை நடமாட அனுமதிக்கக்கூடாது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது என தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அந்த அமைப்பினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலங்களை பார்க்க வேண்டும். காந்தி ஜெயந்தியன்று ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்ன வேலை? இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Police threatening Annamalai arrested K. Balakrishnan interviewed காவல்துறை மிரட்டும் அண்ணாமலை கைது கே.பாலகிருஷ்ணன் பேட்டிமேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
அதிமுக வேட்பாளரை நாளை அறிவிக்க திட்டம்?.. 7 மணி நேரத்துக்கு மேலாக ஆதரவாளர்களுடன் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு..!
ஆல் இந்தியா லீடர் ஆகிவிட்டார் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி அணிக்கு செக் வைக்க அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியை தூண்டிவிட்ட பாஜக..!
ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட மாடல் ஆட்சியை எடை போடும் தேர்தல்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!