பழைய பொருட்களை கொண்டு 8 மணி நேரத்தில் மாதிரி விமானத்தை உருவாக்கிய வாலிபர்
2022-09-27@ 21:03:10

மூணாறு: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு அழகு சேர்ப்பதற்காக சிறிய மாதிரி விமானத்தை வடிவமைக்குமாறு, நெடுங்குண்டம் அருகே உள்ள இடத்தற முக்கு பகுதியை சேர்ந்த பிரின்ஸிடம் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக், பழைய தகரங்களை சேகரித்து 12 அடி நீளம், 11 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட விமான ஒன்றின் மாதிரியை தனி ஆளாக உருவாக்கும் பணியை தொடங்கினார். 8 மணி நேரத்தில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகன டயர்கள் விமான சக்கரங்களாகவும், தள்ளி கொண்டு போகும் வகையில் இந்த விமானத்தை அவர் தயாரித்துள்ளார். பிரின்ஸ் உருவாக்கிய இந்த விமானத்தை காண அப்பகுதி பொதுமக்கள் அவரது வீட்டிற்கு படையெடுத்துள்ளனர். இந்த விமான மாதிரியை நெடுங்கண்டம் அரசு தொடக்க பள்ளியில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 8 மணி நேரத்தில் தனி ஆளாக பழயை பொருட்களை கொண்டு விமான உருவாக்கிய பிரின்சுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!