மதவெறியர்களை தூண்டிவிட்டு என்னை கொல்ல சதி: நவாஸ் மகள் மீது இம்ரான் குற்றச்சாட்டு
2022-09-27@ 20:10:11

லாகூர்: மதவெறியர்களை தூண்டிவிட்டு என்னை கொல்ல சதித் திட்டம் நடப்பதாகவும், நவாஸ் மகள் இதனை செய்வதாக இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அவரது அமைச்சரவை அதிகாரிகளுக்கு இடையேயான நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆடியோ பேச்சு லீக் ஆனதால், பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஹீம் யார்கானில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேசுகையில், ‘அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையிலான பேச்சு தொடர்பான ஆடியோ வெளியானதையடுத்து, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மகளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) மூத்த தலைவருமான மரியம் நவாஸ், என்னைக் கொல்ல சதி செய்தார். மத வெறியர்களை தூண்டிவிட்டு வகுப்புவாதம் மற்றும் மத வெறுப்பு பிரசாரம் மூலம் கொல்ல விரும்புகிறார். இதனால் என் உயிருக்கு மதவெறியர்களால் ஆபத்து உள்ளது. ஆனால் நான் மரணத்திற்கு பயப்படவில்லை. எனது மரணம் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது; வேறு யாராலும் தீர்மானிக்கப்படுவது இல்லை’ என்று கூறினார்.
மேலும் செய்திகள்
குண்டுவெடிப்பில் 101பேர் பலி எதிரொலி; பாகிஸ்தானில் போலீசுக்கே பாதுகாப்பில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த போலீசார்
அபுதாபியில் இருந்து புறப்பட ஏர் இந்தியா விமானதில் நடுவானில் தீ: அவசரமாக தரையிறக்கம்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.57 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவுடனான உறவு நீடிக்கும் பிபிசியின் சுதந்திரத்தை அரசு பாதுகாக்கும்: இங்கிலாந்து அறிவிப்பு
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சவாளி நிக்கி ஹாலே போட்டி?
நிலக்கரிக்கு அதிக கட்டணம் அதானி ஒப்பந்தம் மறுபரிசீலனை: வங்கதேசம் அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!