உளுந்தூர்பேட்டை அருகே பாமாயில் ஏற்றி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; ஆறாக ஓடிய பாமாயில்
2022-09-27@ 18:48:16

உளுந்தூர்பேட்டை: சென்னை மணலியில் இருந்து 40 டன் பாமாயில் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகேசன் (48) என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி என்ற இடம் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி சென்ற டிரைவர் முருகேசன் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். லாரியிலிருந்து வெளியேறிய பாமாயிலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாளி மற்றும் கேன்களில் பிடித்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் அவர்களை விரட்டிவிட்டு ஊழியர்கள் மூலம் உடைப்பை சரி செய்தனர். இருப்பினும் சுமார் 2 டன் அளவிற்கு பாமாயில் டேங்கரிலிருந்து வெளியேறி ஆறாக ஓடியது. இதனை தொடர்ந்து இரண்டு கிரேன்கள் மூலம் விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.இந்த விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். லாரியை மீட்கும் போது உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!