கார், பணம் பறித்த வழக்கில் நிழல் உலக தாதாவின் உதவியாளர் கைது
2022-09-27@ 17:18:51

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உதவியாளர் ரியாஸ் பதி என்பவரை மிரட்டி பணம் பறித்தல் புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வெர்சோவா போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வெர்சோவா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.7.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரியாஸ் பதி பறித்துள்ளார். அதையடுத்து மிரட்டி பணம் பறித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரியாஸ் பதி கைது செய்யப்பட்டார்.
இந்த எப்ஐஆரில் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளர் சோட்டா ஷகீல் மற்றும் ஷகீலின் உறவினர் சலீம் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கைது செய்யப்பட்ட ரியாஸ் பதி கடந்த 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவைவிட்டு வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றார்’ என்று அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!