உயர்சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலை
2022-09-27@ 14:29:02

டெல்லி : உச்சநீதிமன்றம் அரசியல் சாசனம் அமர்வில் விசாரிக்கப்படும் வழக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. கவனமாக கையாளவேண்டிய பாலியல் வழக்குகள் மற்றும் திருமணம் சார்ந்த வழக்குகளை தவிர பிற வழக்குகளின் விசாரணை நேரலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் 2018-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. எனினும் 4 ஆண்டுகளாக நேரலை நடைமுறைக்கு வராத நிலையில் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் வழக்குகளை நேரலை செய்ய தலைமை நீதிபதி லலித் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி முன்னேறிய பிரிவினருக்கான பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று முதல் முறையாக நேரலை செய்யப்பட்டது. செவ்வாய், புதன், வியாழன் கிழமை என வாரத்தில் 3 நாட்களில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசனம் அமர்வில் விசாரணை நடைபெறும். தலைமை நீதிபதி லலித், சந்திரசூட் மற்றும் கவுல் தலைமையிலான அரசமைப்பு அமர்வுகளை விசாரிக்கப்படும் வழக்குகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளன. இதன் நேர்ச்சியாக உச்சநீதிமன்றத்தில் பிற வழக்குகள் விசாரணையும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஏழைகள், நடுத்தர வர்க்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்
விசா பிரச்னையால் விமானத்தை தவறவிட்ட கவாஜா
வருமான வரி வரம்பு உயர்வால் சேமிப்பு பழக்கமே இருக்காது காப்பீடு திட்டங்களும் ஈர்க்காது: முதலீட்டு ஆலோசகர்கள் கவலை
டிசம்பரில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்
பனிச்சறுக்கு போட்டியில் பரிதாபம் 2 போலந்து வீரர்கள் காஷ்மீரில் பலி: 21 பேர் பத்திரமாக மீட்பு
ராதாபுரம் தேர்தல் வழக்கு கண்டிப்பாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்: அப்பாவு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!