சாத்தூர் அருகே இருக்கன்குடியில் புதர்மண்டிக் கிடக்கும் அணை பூங்காவாகுமா
2022-09-27@ 14:18:19

*பொழுது போக்கு அம்சமாக படகு சவாரி விடலாம்
*வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கலாம்
சாத்தூர் : சாத்தூர் அருகே, இருக்கன்குடியில் புதர்மண்டிக் கிடக்கும் அணையை பூங்காவாக மாற்றி, நீர் தேக்கத்தில் பொழுது போக்கு அம்சமாக படகு சவாரி விட்டு, வருவாயை பெருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே 24 அடி உயர இருக்கன்குடி அணை உள்ளது. இந்த அணை கட்டுமானப் பணியின்போது, அழகிய செயற்கை நீரூற்றுகள், பழ மரங்கள், பூச்செடிகள் அமைத்து, குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், இதற்கு மாறாக வேப்பமரங்கள், ஒரு சில பழ மரங்கள் மட்டுமே வைத்து வளர்த்தனர். மேலும், முறையான பராமரிப்பு இல்லாமல் அணையில் நீர்பிடிப்பு பகுதிகளில் சீமைக்கருவேல முட்செடிகளும், நீர்வழிந்தோடும் மதகு பகுதியில் வாகை மரங்கள், சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. அணையின் முழு கொள்ளளவான 24 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கினால் நல்லான்செட்டிபட்டி, சிறுக்குளம் உள்பட சில கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என கூறி, தற்போது வரை 22 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நன்றாக பராமரிக்கப்படும் நிலையில், இருக்கன்குடி அணை மட்டும் பராமரிப்பில்லாமல் காணப்படுகிறது. ஷட்டர்கள் நல்ல முறையில் உள்ளதால் தண்ணீர் கசிவு குறைவு. ஆனால், இப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. தண்ணீர் நிரம்பினால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறும் ஆற்றுப்பகுதியிலும், சீமைக்கருவேல மரங்கள், வாகை மரங்கள் முளைத்துள்ளன.
மேலும், நீர்தேக்கத்தில் தண்ணீர் பாசி படர்ந்து காணப்படுகிறது. புதர் மண்டிய அணைப்பகுதியில் பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துகளும் அதிகமாக உள்ளன. அணையில் உள்ள மின்விளக்குகளை சமூக விரோதிகள் உடைத்ததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, அணையில் புதர்மண்டிக் கிடக்கும் பகுதியை சீரமைத்து பூங்காக்கள் அமைக்க வேண்டும் அணை நீர்தேக்கத்தில் படகு சவாரி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!