புரட்டாசி மாதத்தையொட்டி ராதா கிரிதாரி கோயிலில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு
2022-09-27@ 02:12:05

புழல்: புழல் பகுதியில் உள்ள ஸ்ரீராதா கிரிதாரி கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஜகன்நாதர், பலதேவர், சுபத்திரை ஆகியோருக்கு தேரோட்டம் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தொற்று காரணமாக இக்கோயிலில் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு ஸ்ரீ ராதா கிரிதாரி கோயிலில் நேற்று முன்தினம் இரவு புரட்டாசி மாத தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜகன்நாதர், பலதேவர், சுபத்திரை ஆகியோர் பவனி வந்தனர். செங்குன்றம் முதல் புழல் வரை நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
வழக்கமாக கோயிலின் வெளியே பவனி வரும்போது, உற்சவமூர்த்தி வெளியில் அருள்பாலிப்பார். எனினும், இங்கு மூலவர்களான ஜகன்நாதர், பலதேவர், சுபத்திரை ஆகியோர் தேரோட்டமாக வெளியே வந்து மக்களுக்கு அருள்பாலிப்பது விசேஷம். தேரோட்டத்தின்போது வழிநெடுகிலும் பெண்கள் கோலாட்டம் ஆடியும், நாம சங்கீர்த்தனம் இசைத்தும், ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதில், பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!