குடிநீர் வாரிய லாரி டிரைவருக்கு வெட்டு: வாலிபர் கைது
2022-09-27@ 02:09:29

பெரம்பூர்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (25). வியாசர்பாடியில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் தண்ணீர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று நள்ளிரவு குடிநீர் வாரிய அலுவலகம் அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபரை, ரவிச்சந்திரனை எழுப்பி சதீஷ் எங்கே என கேட்டுள்ளார். அதற்கு அவர் எனக்கு சதீஷ் யார் என்று தெரியாது என கூறியுள்ளார்.
உடனே அந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் ரவிச்சந்திரனின் தலை மற்றும் இடது கையில் சரமாரியாக வெட்டி உள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். உடனடியாக ரவிச்சந்திரனை மீட்ட ஊழியர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிந்து வியாசார்பாடி அன்னை சத்யா நகரை சேர்ந்த விக் னேஷ்வரன் (23) என்பவரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!