கொல்கத்தா செல்ல வந்த மேற்குவங்க பெண் மயங்கி விழுந்து பலி: விமான நிலையத்தில் பரபரப்பு
2022-09-27@ 02:04:02

சென்னை: கொல்கத்தா செல்ல வந்த மேற்குவங்க பெண், சென்னை விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் நிர்மலா பசாரி (68). இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் இவரது மகன் விஜெய் பசாரி, தாயை மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்மலா பசாரி சிகிச்சை பெற்றார். இந்நிலையில், நிர்மலா பசாரி சிகிச்சை முடிந்து நேற்று மதியம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் தனியார் பயணிகள் விமானத்தில், சொந்த ஊர் திரும்ப மகன் விஜெய் பசாரி, தாயை அழைத்துக்கொண்டு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். அங்கு பாதுகாப்பு சோதனை நடக்கும் பகுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, நிர்மலா பசாரி திடீரென மயங்கி விழுந்தார். உடனே மகன் விஜெய் பசாரி விமான நிலைய அதிகாரிகளுக்கு அவசர அவசரமாக தகவல் கொடுத்தார். விமான நிலைய மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து நிர்மலா பசாரியை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக கூறினர். உடனடியாக சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை.!
வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் இன்று வழங்கப்படும் என அறிவிப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன மழை காரணமாக நெற்பயிர் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
4 லட்சம் பேர் எழுதுகின்றனர் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது: சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!