அனிருத்தின் தாத்தா இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன் மரணம்
2022-09-27@ 01:56:51

சென்னை: இசையமைப்பாளரும், இயக்குனருமான எஸ்.வி. ரமணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87. தொலைக்காட்சி, வானொலி, விளம்பரம், திரைப்படம் என அனைத்து துறைகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் எஸ்.வி. ரமணன். ரேடியோ விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்திய இவர் ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு தனது குரல் மூலம் அழகு சேர்த்துள்ளார். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஆவண படங்களை தயாரித்த இவர், ரமண மகரிஷி, சீரடி சாய்பாபா ஆகிய ஆன்மிக ஞானிகள் பற்றிய ஆவணப் படங்கள் இயக்கி, பெரும் வரவேற்பை பெற்றார்.
ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி நடித்த உறவுகள் மாறலாம் என்ற படத்துக்கு இசையமைத்து, இயக்கினார். இவர் மக்கள் தொடர்பு கலையில் செய்த சாதனைகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். இந்நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி. ரமணன் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவர் பிரபல இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் மகன். இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலைய 2ம் கட்ட பணி; வாகன பார்க்கிங் அமைக்க கடைகளை அகற்ற முடிவு: வியாபாரிகள் எதிர்ப்பு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர், உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிப்.24, 25 தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இரட்டை இலை கிடைத்தால் வென்றுவிடுவார்களா?: ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை.. டிடிவி தினகரன் பேட்டி..!!
கல்வி மிகவும் அவசியம்!: புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25% அதிகரித்துள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!