வீடியோ, போட்டோ லீக் செய்தால்... சூர்யா திடீர் எச்சரிக்கை
2022-09-27@ 01:56:05

சென்னை: தனது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவையோ வீடியோவையோ லீக் செய்தால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என நடிகர் சூர்யா தரப்பு எச்சரித்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் ரகசியமாக வைக்கப்படும். படம் ரிலீசாகும் நேரத்தில்தான் இந்த புகைப்படங்கள் தயாரிப்பு தரப்பால் வெளியிடப்படும். சில சமயம், படம் வெளியாகும் வரையும் வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைப்பார்கள். காரணம், கதையின் தன்மை ரசிகர்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக. இந்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு இதுபோல் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் லீக் ஆவது இப்போது சாதாரணமாகிவிட்டது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்களும் இதுபோல் லீக் ஆனது.
இந்நிலையில் இது தொடர்பாக சூர்யா தரப்பிலிருந்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்ட அறிக்கை: எங்கள் தயாரிப்பு திரைப்படமான ’சூர்யா 42’ படப்பிடிப்பு தளங்களில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதை நாங்கள் கவனித்து வருகிறோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் ரத்தம் மற்றும் வியர்வையை உள்ளடக்கியது. இந்த படத்தை அனைவருக்கும் திரையரங்குகளில் பிரமாண்டமான அனுபவமாக தர விரும்புகிறோம். எனவே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நீங்கள் வெளியிட்டு இருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும். எதிர்காலத்திலும் அதை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடுபவர்கள் மீது உரிமை மீறல் தடைசட்டத்தின் கீழ் சட்டப்படிகடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!