கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் விரிவாக விசாரிக்க வழக்கு ஒத்திவைப்பு
2022-09-27@ 01:44:07

புதுடெல்லி: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தை தசரா விடுமுறைக்கு பின்னர் விரிவாக விசாரிப்பதாக கூறி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள்ளி தாளாளர் உட்பட 4 பேருக்கு கடந்த மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக மாணவி ஸ்ரீமதியின் தாயார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தனா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்பதால் வேறு தேதிக்கு ஒத்திவைக்க வலியுறுத்தினார். கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தசரா பண்டிகை விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: புதுச்சேரி அரசு உத்தரவு..!!
காங்கிரசில் இருந்து பெண் எம்பி சஸ்பெண்ட்
ஜம்முவில் 37 இடங்களில் சிபிஐ சோதனை
பிப்ரவரி 24 முதல் 26 வரை சட்டீஸ்கரில் காங். மாநாடு
ரூ.16,133 கோடி வட்டிக்கு ஈடாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை பெற ஒன்றிய அரசு ஒப்புதல்
மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் பெயரில் மிரட்டல்: போலீஸ், என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!