போலி செய்தி பரப்பிய 10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோ முடக்கம்
2022-09-27@ 00:35:23

புதுடெல்லி: சில யூடியூப் சேனல்களில் வெளியிடப்படும் வீடியோக்கள் மத நல்லிணக்கம் மற்றும் பொதுமக்கள் அமைதிக்கு பாதகம் ஏற்படும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை முடக்கும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி 10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை முடக்கி ஒன்றிய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உளவு துறை தகவலின்அடிப்படையில் போலி செய்திகளை பரப்பிய 45 வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளது. பிளாக் செய்யப்பட்ட வீடியோக்களை 1.30 கோடி பேர் பார்த்துள்ளனர். ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டம், ராணுவம், காஷ்மீர் போன்ற விவகாரங்களில் தவறான தகவலை பரப்புவதற்கு இந்த வீடியோக்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிப்பதோடு, பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தன்மை கொண்டவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!