நளினி விடுதலை கோரி வழக்கு ஒன்றிய, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
2022-09-27@ 00:34:55

புதுடெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தன்னுடைய தனிப்பட்ட சட்டப்பிரிவு 142 அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்த நிலையில், வழக்கில் குற்றவாளியாக இருக்கும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், ‘சிறையில் நன்னடத்தையுடன் இருக்கிறோம். வெளியே வந்தாலும் எங்களால் எந்தவித தீங்கும் ஏற்படாது. அதனால், பேரறிவாளனை விடுதலை செய்தது போன்று இவ்வழக்கில் எங்களையும் விடுதலை செய்ய வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். இந்த 2 மனுக்களும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தனா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
Tags:
Nalini seeking release case United Tamil Nadu Government Supreme Court notice நளினி விடுதலை கோரி வழக்கு ஒன்றிய தமிழக அரசு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்மேலும் செய்திகள்
தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு லட்டு கிடைக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி தகவல்
சேலையால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு
அடிதடி வழக்கில் இருந்து மகனை விடுவிப்பதாக கூறி தாய்க்கு செக்ஸ் டார்ச்சர்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
அழகு சாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு: மும்பையில் சோகம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!