சின்னாளபட்டி அருகே கரியன்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை
2022-09-26@ 19:15:20

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் இருந்து அம்பாத்துரை செல்லும் வழியில் தேவி கருமாரியம்மன் கோவில் எதிரே கரியன்குளம் உள்ளது. இக்குளத்தில் தற்போது மழைநீர் தேங்கியுள்ளது. அம்பாத்துரை ஊராட்சி மற்றும் சின்னாளபட்டி 17வது வார்டு சோமசுந்தரம்காலனி, ஜவஹர் காலனி, காமாட்சி நகர், பொன்னன் நகர், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இந்த குளம் உள்ளது.
தற்போது இந்த குளத்தில் சின்னாளபட்டி 16, 17வது வார்டு பகுதியில சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மற்றும் நெகிழிபை, கெமிக்கல் கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் மழைபோல் குவித்து வருவதால் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கின்றன. பொதுமக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் கரியன்குளம் மாசடைவதால் பொதுமக்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.
தற்போது குளத்தில் தேங்கி நிற்கும் நீர் பச்சை நிறமாக மாறிவருவதால், மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதால், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த குளத்தில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து, குளத்தை சுத்தம் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின்கட்டண முறை விரைவில் நடைமுறைக்கு வரும்: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா 8 ஊர் சாமிகள் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!