பூதப்பாண்டி அருகே பரபரப்பு; மாட்டு கொட்டகையில் திடீர் தீ: பசு படுகாயம்
2022-09-26@ 18:33:43

பூதப்பாண்டி: பூதப்பாண்டியை அடுத்த நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (56). விவசாயி. வீட்டில் தகர கொட்டகை அமைத்து பசுமாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல பசுமாடுகளுக்கு தீவனம் வைத்து விட்டு வீட்டில் படுத்து தூங்கி உள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பசுமாடுகள் வழக்கத்துக்கு மாறாக கத்தும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ராமசாமி வெளியே வந்து பார்த்தபோது வைக்கோல் போர் மற்றும் அருகில் இருந்த மாட்டு கொட்டகை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் போர் மற்றும் கொட்டகை முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் இந்த தீ விபத்தில் 1 பசுமாடு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் பூதப்பாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!