தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு: செப். 28-ல் அமைச்சர்கள் ஆலோசனை
2022-09-26@ 15:53:18

சென்னை: தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு குறித்து வரும் 28ம் தேதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும், அதாவது தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதனடிப்படையில் நேர கட்டுப்பாடு என்பது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24ம் தேதி கொடுத்தப்பட உள்ள நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமை பட்டாசு விற்பனைக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக வரும் 28ம் தேதி தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பட்டாசு சங்கத்தின் பிரதிநிதிகள் மத்தியில் ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய்த்துறை அமைச்சர், தொழிலாளர்துறை அமைச்சர், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற உள்ளனர். மேலும், சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஆலோசனைக்கு பிறகே பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்படும்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!