பாலக்காட்டில் பெட்ரோல், காஸ் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டி பேரணி
2022-09-26@ 13:58:22

பாலக்காடு : பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சித்தூர் தாலுகா இளைஞர் காங்கிரசார், விவசாயிகள் மாட்டு வண்டி பேரணி சென்றனர்.பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையில் பெட்ரோல், டீசல், காஸ் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சித்தூர் தாலுகா இளைஞர் காங்கிரசார் மற்றும் விவசாயிகள் மாட்டு வண்டி பேரணி நேற்று நடத்தினர்.
இப்பேரணியை கொழிஞ்சாம்பாறையில் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் தணிகாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சித்தூர் தொகுதி காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஷபீக் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல், காஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இவற்றை மத்திய, மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி பேரணி நடத்தினர். பேரணி கொழிஞ்சாம்பாறை முதல் கம்பிளச்சுங்கம் வரை நேற்று நடைபெற்றது. மேலும், ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பிரசாரம் செய்தனர்.
இதில், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலர்கள் சாஜன், பிரியங்கா, தொகுதி துணை தலைவர்கள் சுரேஷ், சனாதன், முருகேஷ், ஸ்ரீனிவாஸ், ஷாகுல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டனர்..வட்டாரப் பொறுப்பாளர்கள் ஜித்தின், மனு, வருண், சம்சாத் பானு, வட்டாரத் தலைவர் ராஜுநாத், சதானந்தன் இளைஞர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் அனிஷ், தாமஸ் லெனோ, கிருதில், சுனில்குமார், வத்சன், பெரோஸ்கான் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!