சிதம்பரம் பகுதியில் பன்னீர் கரும்பு சாகுபடி தீவிரம்
2022-09-26@ 12:41:10

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வண்டல் மண், மணல் சார்ந்த நிலங்கள் அதிக அளவில் இருப்பதால் பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது.மே, ஜூன், மாதம் பயிரிடப்படும் கரும்பு 10 மாதம் பயிராகும். இவை வரும் பொங்கல் பண்டிகைக்கு அறுவடை தயாராக இருக்கும். இப்பகுதியில் உள்ள கடவாச்சேரி, வேலக்குடி, வல்லம்படுகை, பழைய நல்லூர், அகரநல்லூர், வையூர், பெராம்பட்டு, வல்லத்துறை, கீழக்குண்டலப்பாடி, ஜெயங்கொண்டபட்டினம், மேலகுண்டலப்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 100 ஏக்கருக்கு மேல் பன்னீர் கரும்பு பயிர் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பன்னீர் கரும்புகள் சென்னை, வேலூர், தூத்துக்குடி, செஞ்சி உள்ளிட்ட வெளியூர், வெளி மாநிலம் உள்பட பல ஊர்களில் இருந்து வந்து நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து செல்வார்கள். ஒரு ஏக்கருக்கு 40 டன் முதல் 45 டன் வரை மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!