வத்திராயிருப்பு அருகே தோட்டத்தில் பதுக்கிய 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்-3 பேர் கைது
2022-09-26@ 12:24:26

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே, தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை அடுத்த கான்சாபுரம் அருகே, அத்திக்கோயில் செல்லும் வழியில் உள்ள செம்பட்டையான் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் (22).
அய்யனார்புரத்தை சேர்ந்தவர்கள் டேனியல் ராஜ்குமார் (22), தேவாஜ் (25). இவர்கள் மூவரும் கான்சாபுரத்தில் மலையடிவார தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக, கூமாபட்டி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. கூமாபட்டி எஸ்ஐ கணேசன், வத்திராயிருப்பு எஸ்ஐ பிரகஸ்பதி தலைமையில் போலீசார், அந்த தோட்டத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், 5 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து, தோட்டத்திலிருந்த மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக 6 நாட்டு வெடிகுண்டுகள் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு பதுக்கிய இடத்தை போலீசார் தேடி வருகின்றனர். காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டதா அல்லது வேறு எதற்கும் பதுக்கி வைக்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!