வறுமையை ஒழித்து, தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்குபவர் மன்மோகன் சிங்: ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து..!!
2022-09-26@ 11:44:15

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும் மன்மோகன் சிங் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுவதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் தன்னடக்கம், அர்ப்பணிப்பு, இந்தியாவின் வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பு எவருடனும் ஒப்பிட முடியாது என்றும் என்னை போன்ற பல இந்தியர்களுக்கு மன்மோகன்சிங் ஒரு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். மன்மோகன் சிங் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் என ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தை கடைபிடித்து நிலையான ஆட்சியை வழங்கியவர் மன்மோகன் சிங். வறுமையை ஒழித்து, தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்குபவர் மன்மோகன் சிங் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். மன்மோகன் சிங் நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஏழைகள், நடுத்தர வர்க்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்
விசா பிரச்னையால் விமானத்தை தவறவிட்ட கவாஜா
வருமான வரி வரம்பு உயர்வால் சேமிப்பு பழக்கமே இருக்காது காப்பீடு திட்டங்களும் ஈர்க்காது: முதலீட்டு ஆலோசகர்கள் கவலை
டிசம்பரில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்
பனிச்சறுக்கு போட்டியில் பரிதாபம் 2 போலந்து வீரர்கள் காஷ்மீரில் பலி: 21 பேர் பத்திரமாக மீட்பு
ராதாபுரம் தேர்தல் வழக்கு கண்டிப்பாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்: அப்பாவு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!