மைசூருவின் 412-வது தசரா கொண்டாட்டம்: சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து விழாவை தொடக்கி வைத்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
2022-09-26@ 11:04:46

மைசூரு: சரித்திர புகழ் பெற்ற 412-வது மைசூரு தசரா விழாவை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கர்நாடக மாநிலம், மைசூருவில் தசரா விழா இன்று தொடங்கி வரும் 3ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடங்கி வைக்க ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், ஜனாதிபதியின் நிகழ்ச்சிகள் குறித்த அறிக்கையை ராஷ்டிரபதி பவன் நேற்று வெளியிட்டது. அதன்படி, இன்று காலை சிறப்பு விமானம் மூலம் மைசூரு வந்த அவர், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பின் அங்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி அம்பாரியில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்களை தூவி, தசரா திருவிழாவை தொடங்கி வைத்தார்.
அவருடன் கவர்னர் தவார் சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய மாதிரிகளான பிரகலாத் சோஷி, சோபா கரண் ராஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். 412-வது மைசூரு தசரா திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியுள்ளது. இன்று தொடங்கி 10 நாட்கள் வரை நடைபெறும் இத்திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 10-வது நாள் விஜயதசமி அன்று உலக பிரசித்தி பெற்ற யானைகள் ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தில் 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப்பட்டு மைசூரு அரண்மனையில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெறும். இது உலக பிரசித்தி பெற்ற ஊர்வலமாகும்.
இந்த ஊர்வலத்திற்கு பிறகு தசரா திருவிழா முடிவடையும். மேலும் மைசூரு அரண்மனை இரவு நேரங்களில் ஜொலிப்பதற்காக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு மைசூரு வந்த காரணத்தினால் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
கேரளாவில் இன்று முதல் மின் கட்டணம் உயர்வு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே?.. ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்..!
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்
சாமானிய மக்களுக்கு பலன் தரும் பட்ஜெட்; வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..!
ஜெகன் அண்ணா காலனியில் வீடுகள் கட்டும் பணியை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும்-சித்தூர் ஆணையாளர் உத்தரவு
திருப்பதி பைரெட்டிபள்ளி பகுதியில் ₹3.25 கோடியில் புதிய சிமெண்ட் சாலைகள், கால்வாய்கள்-எம்பி தகவல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!